முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தான்

தன்னை அறியாமல் வாழும் வாழ்க்கையும் கனவுலகில் வாழும் வாழ்க்கையும் ஒன்றுதான். பற்றுக பற்றற்றான் பற்றினை- உயிரே பற்று இல்லாதவனாகவும் ,உடல் மூலமாக தன்னை வளர்க்கும் பற்றுள்ளவனாகவும் உள்ளான். பற்றில்லாதவன்- அவ்வுடலை விட்டு நீங்கி அடுத்த உடலை எடுக்கின்றான். பற்றுள்வன்- உடல் பெற்றபின் உடலின் இச்சசைக்கு பற்று கொண்டு விடுகிறான். மாயா தேவியின் செயல் அதிசயம் தான்.

இலக்கு

இலட்சியம் - ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு இலட்சியம் உண்டு., அது எடுத்துக்கொண்ட ஆசையின் உணர்வுக்கொப்ப, பணமோ,மண்ணோ,பெண்ணோ,ஆணோ,பொருள் மீதான பற்றோ,அதை நோக்கியே அதன் (உயிர்) பயணம் செல்கிறது,. நான் எனது இலக்கில் உறுதியாகவும், வலிமையுடனும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.

தட்டும், உணவும்

பெரும் கொடையாளனாகிய இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட தட்டும் அதில் படையல் இட்டு உனக்கென்றே வழங்கப்பட்ட உணவும் மட்டுமே உனக்கு சொந்தம். அடுத்தவன் தட்டையும் உணவையும் பார்க்காதே, உனக்கு வழங்கப்பட்டதை உண்டு மகிழ்ச்சியாக இரு.

கல்யாண இராமன்

ஆறறி வின் தன்மை பஞ்ச கோஷங்கள் தாண்டி ஆறாம் கோஷம் "ஓம் ஶ்ரீஈஸ்வரா" தன்கோஷமாக்கி தன்னை அறியும் நிலைக்கு செல்லும் போது உயிருக்கு செய்யும் சேவையாக "தன்னை நேசிக்கும்" பண்பு தன்னறிவுக்குள் உருவாகிவிடுகிறது. ----கல்யாண இராமன். "தன்னை நேசிக்கும்" பண்பு வந்த பிறகு அங்கு துன்பம் என்ற ஒன்று ஏது? தனக்குரிய தன் உலகை அறிந்த பின் ஆங்கு இன்பம் ஒன்றே சாஸ்வதமன்றோ!!. இதையே பேரின்பம் என்றனரோ பெரியோர்?!.