கண்ணின் நினைவு முன்னால் சென்று பார்க்கும் பொருளில் மோதி கம்பேர் பண்ணி தனக்குரிய அறிவில் அதன் (பார்க்கும் பொருளின் ) உணர்வை ஈர்த்து தனக்குள் சேர்க்கிறது (உ.ம்) : நல்லவன் ஒருவன் தீய குணமுடையவனை சந்தித்தால் இவனுக்குள் அவனை ஏற்றுக்கொள்ள முடியாது, நட்பு கொள்ள முடியாது. அதே குணம் கொண்டவர்கள் சந்தித்தால் எளிதாக நட்பு கொள்வார்கள். இங்கு கண்ணின் நினைவு முக்கியம்.
தன்னை அறியாமல் வாழும் வாழ்க்கையும் கனவுலகில் வாழும் வாழ்க்கையும் ஒன்றுதான். பற்றுக பற்றற்றான் பற்றினை- உயிரே பற்று இல்லாதவனாகவும் ,உடல் மூலமாக தன்னை வளர்க்கும் பற்றுள்ளவனாகவும் உள்ளான். பற்றில்லாதவன்- அவ்வுடலை விட்டு நீங்கி அடுத்த உடலை எடுக்கின்றான். பற்றுள்வன்- உடல் பெற்றபின் உடலின் இச்சசைக்கு பற்று கொண்டு விடுகிறான். மாயா தேவியின் செயல் அதிசயம் தான்.
இலட்சியம் - ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு இலட்சியம் உண்டு., அது எடுத்துக்கொண்ட ஆசையின் உணர்வுக்கொப்ப, பணமோ,மண்ணோ,பெண்ணோ,ஆணோ,பொருள் மீதான பற்றோ,அதை நோக்கியே அதன் (உயிர்) பயணம் செல்கிறது,. நான் எனது இலக்கில் உறுதியாகவும், வலிமையுடனும் முன்னேறிக்கொண்டிருக்கிறேன்.